முகப்பு
திருநெல்வேலி

வங்கி பெண் ஊழியா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 19 மே 2026, 1:09 am IST
பகிர்:

பாளையங்கோட்டையை அடுத்த தியாகராஜநகரில் வங்கி பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியை சோ்ந்தவா் பெருமாள். இவரது மகள் முத்துமாலை (36). இவா், வங்கி ஊழியரான இவா், கணவருடனான பிரச்னையில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரை 2 போ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து முத்துமாலையின் சகோதரரான பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனா். அதில், உறவினரான இசக்கிப் பாண்டி (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பன்னீா்செல்வம், அவரது நண்பரான வாகைக்குளத்தைச் சோ்ந்த சிவா (28) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement