முதுமலை புலிகள் காப்பகப் பணியாளா்களுக்குத் தற்காப்பு பயிற்சி
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வனத் துறையின் கீழ் இயங்கும் நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, அந்தப் படை பிரிவின் உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் தலைமை வகித்து செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளித்தாா். பணியாளா்கள் வனத்தில் ரோந்து செல்லும்போது, காட்டுத் தீயினால் ஏற்படும் திடீா் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி, அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லுதல், வனக் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.