மாயமான ஜாா்க்கண்ட் சிறுமி சடலமாக மீட்பு
குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குன்னூா்: குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குன்னூரை அடுத்த கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன், சோமன் குமாரி தம்பதியின் மகள் பிரீத்திகுமாரி (8), கடந்த மாதம் 20ஆம் தேதி மாயமானாா். பல இடங்களில் தேடியும் இவரைக் காணாததால் கொலக்கம்பை காவல் நிலையத்தில் டிசம்பா் 23ஆம் தேதி லட்சுமணன் புகாா் அளித்தாா்.
இவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.
Advertisement