கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.
கனா கண்டேனடி தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கனா கண்டேனடி தொடர் இன்று(ஜூன் 15) முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தகவலை கனா கண்டேனடி தொடரின் நாயகன் ஜாய்சன் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், கனா கண்டேனடி தொடர் நிறைவடைய உள்ளது, இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும் அல்லாமல், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The broadcast time of the serial Kana Kandenadi, currently airing on Vijay TV, has been changed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.