முகப்பு
நூல் அரங்கம்

மனோதிடம் - ஒரு புதுமையான பெருங்கதை - குஜராத்தி மூலம்

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 1:15 am IST
பகிர்:

மனோதிடம் - ஒரு புதுமையான பெருங்கதை - குஜராத்தி மூலம்: பன்னாலால் படேல்; ஆங்கிலத்தில்: வி.ஒய்.கண்டக்; தமிழில்: ந.சுப்ரமணியன்; பக்.608; ரூ. 375; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443,

அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

1947}இல் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட "மனவினி பாவாய்' என்ற நாவலின் தமிழாக்கம். குஜராத்தின் கிராமப்புற வாழ்வை இயல்பாக சித்திரிக்கிறது. 1900}ஆம் ஆண்டு குஜராத்தின் கிராமப் பகுதிகளில் நிலவிய பஞ்சமே நாவலின் பின்புலம். உணவு கிடைக்காமல் உயிர் வாழ்வதற்காக மக்கள் போராட வேண்டிய அவலநிலை நம் மனதை உருக்குகிறது. பஞ்சம் நிலவிய கிராமப் பகுதிகளிலும் கொள்ளையர்கள் வந்து கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் நிலவுவதும், அப்படியே வந்தாலும் உணவுக்காக வைத்திருக்கும் ஒருவேளைக்கான தானியத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது கொள்ளையடிக்க? என்ற மக்களின் அலட்சியப்போக்கும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

வறுமையும், பசியும், பட்டினியும் நிலவியபோதிலும் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் மலரும் காதலும், அவர்களுக்கு இடையில் எழும் சிக்கல்களும், மனப் போராட்டங்களும் நாவலை முழுமையாக்குகின்றன. நூறாண்டுகளுக்கு முந்தைய இந்திய கிராமம் ஒன்றின் வாழ்வை உணர்ந்து கொள்ள உதவும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments