சேரன் குலக்கொடி
சேரன் குலக்கொடி- கோவி. மணிசேகரன், பக். 572; ரூ.425; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044-2526 7543.
சேரன் குலக்கொடி- கோவி. மணிசேகரன், பக். 572; ரூ.425; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044-2526 7543.
தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972-இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது சிறப்பு.
செங்குட்டுவனின் மனைவி வேள்மாளின் தங்கையான பொற்கொடியை வாசகர்கள் மனதில் நீங்காத உயிரோவியமாக்கி விட்டார் கோவி.மணிசேகரன். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் இந்த நாவலில் ஒரு பாத்திரமாகவே வருகிறார். இளங்கோவடிகள் - பொற்கொடி உரையாடல் நாவலில் உயிரோட்டமாய் அமைந்துள்ளது. மோகத்தில் திளைந்த மோகூர் அரசனான திருமாறன், ஏகபத்தினி விரதனாக இல்லாததால் தன்னைத் தீண்ட அனுமதிக்காத மனைவி பொற்கொடியின் அகால இறப்புக்குக் காரணமாகிறான். போரில் தோற்று மரணத்தின் கடைசி மூச்சில், "கற்பின் சிகரமே! காலமெல்லாம் நீ வாழ்க!' என்று திருமாறன் வாழ்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியை இரு பாத்திரங்களாக்கி உலவவிட்டுள்ளார் நூலாசிரியர். தங்கை மலர்க்குழலியை கலையரசியாகக் காட்டி, தமக்கையாகிய திருமேனியை தியாகத்தின் சுடராகப் படைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் எப்படி ஊழ்வினை காரணமாக நிற்கின்றதோ, அப்படியே இந்தப் புதினத்திலும் ஊழ்வினை காரணமாக நிற்கிறது.
Advertisement
Advertisement