முகப்பு
நூல் அரங்கம்

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை - எஸ். குருமூர்த்தி; பக். 160; ரூ. 120; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 4; 044- 2464 1314 . 

Updated On : 5 பிப்ரவரி 2018, 12:52 am IST
பகிர்:

ரூபாய் நோட்டுக்கள் தடை - எஸ். குருமூர்த்தி; பக். 160; ரூ. 120; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 4; 044- 2464 1314 . 
இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. 
கடந்த 2016-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளின் எண்ணிக்கை மொத்த கரன்சி புழக்கத்தில் 86 சதவீதம் என்ற நிலையில், அவை மதிப்பிழந்துவிட்டதாக அரசு அறிவித்தபோது எழுந்த பூமிக்குலுக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். அந்த நடவடிக்கை மூலம், எவ்வாறு கருப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, தீவிரவாத , பயங்கரவாத நடவடிக்கைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார்.
மேலும், கரன்சி மதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றங்களும் விளக்கப்பட்டுள்ளன. கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எழுந்த அரசியல் எதிர்ப்பானது, நாட்டின் முக்கிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி அடைந்த பிறகு அடங்கிவிட்டதும் சுட்டிக் காட்டப்படுகிறது. 
பொருளாதார விவகாரங்கள் என்றாலும் அனைவரையும் பாதிக்கக் கூடிய இந்த முக்கிய விவகாரம் குறித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments