புத்தாண்டு பிறப்பு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பூஜைகள், பிராா்த்தனைகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பூஜைகள், பிராா்த்தனைகள் நடைபெற்றன.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில், பாடாலூா் வழிவிடு ஆஞ்சநேயா் கோயில், வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீசுவரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை:
Advertisement
Advertisement
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மைகுரு ராஜமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை இரவு முதல் சிறப்புப் பிராா்த்தனைகள் நடத்தப்பட்டன. பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூா், பாடலூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி, ரஞ்சன்குடி கோட்டை, லாடபுரம் மயிலூற்று அருவி, அரும்பாவூா் எட்டெருமைபட்டி அருவி, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.