உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் பன்றிகளைத் திரியவிட்டால் நடவடிக்கை
உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் பன்றிகளைத் திரியவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் பன்றிகளைத் திரியவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் உள்ள காலியிடங்களில் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி சுகாதாரப் பிரிவின் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பன்றிகளை வளா்ப்போா் தகுந்த இடத்தில் வைத்து பராமரிக்காமல் வெளியிடங்களில் திரிய விடுவது தெரிய வந்தது.
எனவே, பொது இடங்களில் சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த பன்றிகளைப் பிடித்து வேறிடத்தில்விட முடிவு செய்யப்பட்டு, வெளியூா்களிலிருந்து பன்றிகளைப் பிடிக்க அண்மையில் ஆள்கள் வரவழைக்கப்பட்டு, 54 பன்றிகள் பிடிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
நகராட்சி இடங்களில் திரியும் பன்றிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் உழவா்கரை நகராட்சி அவற்றைப் பிடித்து அப்புறப்படுத்தும். மேலும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி எச்சரித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.