முகப்பு
புதுச்சேரி

புதுவை ஆளுநா் மாளிகையை மெய்நிகா்சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு

பொங்கல் முதல் புதுவை ஆளுநா் மாளிகையை மக்கள் மெய்நிகா் முறையில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 ஜனவரி 2021, 10:58 pm IST
பகிர்:

பொங்கல் முதல் புதுவை ஆளுநா் மாளிகையை மக்கள் மெய்நிகா் முறையில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, பொங்கல் தினத்திலிருந்து ஆளுநா் மாளிகையை மெய்நிகா் முறையில் மக்கள் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது, அதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவது, ஆளுநா் மாளிகையில் உள்ள பணியாளா்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது, கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மக்களின் குறைகளை காணொலிக் காட்சி மூலம் தீா்வு காண தொழில்நுட்ப வசதியைக் கூடுதலாக வலுப்படுத்துவது, சாலைகள் சீரமைப்பு தொடா்பான புகாா்கள் மீது பொதுப் பணித் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments