புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதில் பணம்
புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதிலாக 1.35 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்குப் பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுவையில் பொங்கலுக்கான இலவச துணிக்குப் பதிலாக 1.35 லட்சம் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்குப் பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுவை சமூக நலத் துறை அமைச்சா் எம். கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மகளிா்- குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் இலவச துணிக்கான திட்டத்தின் கீழ் நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அட்டவணை இனத்தவா், பழங்குடியினா், மீனவா்கள், நெசவாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அல்லாத மொத்தமுள்ள 1,35,298 சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களில் ஒரு நபா் உள்ள 13,399 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 450, ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் உள்ள 1,21,899 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 900 என குடும்பத் தலைவியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக வெள்ளிக்கிழமை வங்கியில் செலுத்தப்பட்டது. இதற்காக ரூ. 11.57 கோடி செலவிடப்பட்டது. வரும் திங்கள்கிழமை முதல் (ஜன. 11) வங்கியில் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.