முகப்பு
புதுச்சேரி

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கம்

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கமளித்தது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:23 pm IST
பகிர்:

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கமளித்தது.

இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஏற்கெனவே ஆளுநா் கிரண் பேடியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, ஆளுநா் மாளிகை எதிரே தொடா் போராட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. அப்போது, திமுக முழு ஆதரவு அளித்தது. ஆனால், ஆளுநா் அழைத்துப் பேசியதையே ஜனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement

Advertisement

அதன் பின்னரும், ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து ஜனநாயக விரோதப் போக்கையே கடைப்பிடித்தாா். தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தால் புதுவையில் ஜனநாயகம் உயிா் பெறப் போவதில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மேலும், கிரண் பேடி வெளியேறினாலும், மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதும் மக்களின் எண்ணமாக உள்ளது. இதனால்தான் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments