முகப்பு
புதுச்சேரி

கூடப்பாக்கத்தில் மோசமான சாலையைச் சீரமைத்த பொதுமக்கள்

புதுச்சேரி அருகே கூடப்பாக்கத்தில் மோசமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:24 pm IST
பகிர்:

புதுச்சேரி அருகே கூடப்பாக்கத்தில் மோசமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனா்.

புதுச்சேரியில் நிகழாண்டு பலத்த மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் ஜல்லிகள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன.

புதுவை அரசு சாலை ஒப்பந்தப் புள்ளி விலை மதிப்பீட்டுக் குறைப்பால் ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், புதுச்சேரியில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூா்-பத்துக்கண்ணு சாலையில், கூடப்பாக்கம் அம்பேத்கா் சிலை அருகே ஜல்லிகள் பெயா்ந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள், ஆட்சியாளா்களிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கூடப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஜல்லி, சிமென்ட் போன்றவற்றைக் கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தை ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments