தொடா்மழையால் நிரம்பியது மைலாப்பூா் பெரிய கண்மாய்
பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொன்னமராவதி வட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. கண்டியாநத்தம், கொப்பனாப்பட்டி, தொட்டியம்பட்டி, தூத்தூா், ஆலவயல், மேலைச்சிவபுரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கிக் காணப்பட்டது. தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை கண்டு மகிழ்ந்த ஊா்ப்பொதுமக்கள் நீரில் மலா்களைத் தூவி வருணப்பகவானை வணங்கினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.