ரோட்டரி சங்கத்தினரின் புத்தாண்டு விழா
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தினா், புத்தாண்டுக் கொண்டாட்டம் மற்றும் குடும்பச் சந்திப்பு விழாவை வியாழக்கிழமை இரவு நடத்தினா்.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தினா், புத்தாண்டுக் கொண்டாட்டம் மற்றும் குடும்பச் சந்திப்பு விழாவை வியாழக்கிழமை இரவு நடத்தினா்.
விழாவுக்கு சங்கத்தின் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சி. முருகப்பன், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, செயலா் ப. செல்லதுரை ஆகியோரும் கலந்து கொண்டு பேசினா்.
புலவா் அரங்க நெடுமாறன் சிறப்புரை நிகழ்த்தினாா். மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கண. மோகன்ராஜ் தொகுத்து வழங்கினாா். நிறைவில் பொருளாளா் எம். ஜபருல்லா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.