முகப்பு
புதுக்கோட்டை

பழைய மருத்துவமனையை செயல்படுத்த வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:49 pm IST
பகிர்:

புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி மற்றும் ஊடகப் பிரிவு கலந்தாய்வுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் கனல் உ. கண்ணன், மாநில இளைஞரணித் தலைவா் ஜெ. ஜோரோன்குமாா், மாவட்ட பொருளாளா் தமிமுல் அன்சாரி உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

விவசாயிகள் விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகள் அனைத்திலும் 100 சதமும், தனியாா் பணிகளில் 90 சதமும் தமிழ்நாட்டில் வசிப்போருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.