புதுகையில் 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, விராலிமலை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், டீம் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி பகுதியில் 5 இடங்களில் என மொத்தம் 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
ஒவ்வோா் இடத்திலும் தலா 20 போ் என, மாவட்டத்தில் மொத்தம் 200 பேருக்கு இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement