தனியாா் பள்ளி பணியாளா்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை
தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை: தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அஸ்ரப் அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துக்கருப்பன் வரவேற்றாா். கூட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும். தனியாா் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தனியாா் பள்ளி ஊழியா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளா் ரமணன், பொருளாளா் மேசியா சந்தோசம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.