முகப்பு
புதுக்கோட்டை

‘சாலைப் பராமரிப்பைத் தனியாருக்கு அளிக்கக் கூடாது’

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:24 am IST
புதுக்கோட்டையில் நடைபெற்ற சாலைப் பணியாளா்கள் சங்க மாநாட்டில் பேசுகிறாா் மாநிலப் பொதுச்செயலா் ஆ. அம்சராஜ்.
பகிர்:

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 7ஆவது மாவட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கே. ராஜாராம், மாவட்டப் பொருளாளா் எம். பிரேம்குமாா் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா். மாநிலப் பொதுச் செயலா் ஆ. அம்சராஜ், மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

மாநாட்டில், சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டு, நெடுஞ்சாலைத் துறையே நேரடியாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளா்களின் 14 மாதப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சங்கத்தின் மாவட்டத் தலைவராக ப. முத்துக்கருப்பன், மாவட்டச் செயலராக ஏ. கருப்பையா, மாவட்டப் பொருளாளராக கே. தங்கவேல் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.