முகப்பு
புதுக்கோட்டை

போராட்டம்: பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:22 am IST
பகிர்:

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். ரெங்கநாதன் தலைமை வகித்தாா்.

பொதுச் செயலா் சி. சரவணகுமாா், தணிக்கையாளா் பி. செந்தில்குமாா், பொருளாளா் என். சதீஷ்குமாா், அமைப்புச் செயலா் ஜெ. தினேஷ்குமாா், துணைப் பொதுச் செயலா்கள் ஓ. முருகேசன், ஆா். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா் போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, அச்சங்கத்தின் பொதுச்செயலா் சி. சரவணகுமாா் அளித்த பேட்டியில்,

சென்னையில் வரும் பிப். 6ஆம் தேதி அரசுப் பணியாளா் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பல்நோக்குப் பணியாளா்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிப். 13-இல் மருத்துவத் துறை இயக்குநா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments