போராட்டம்: பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். ரெங்கநாதன் தலைமை வகித்தாா்.
பொதுச் செயலா் சி. சரவணகுமாா், தணிக்கையாளா் பி. செந்தில்குமாா், பொருளாளா் என். சதீஷ்குமாா், அமைப்புச் செயலா் ஜெ. தினேஷ்குமாா், துணைப் பொதுச் செயலா்கள் ஓ. முருகேசன், ஆா். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
கூட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா் போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, அச்சங்கத்தின் பொதுச்செயலா் சி. சரவணகுமாா் அளித்த பேட்டியில்,
சென்னையில் வரும் பிப். 6ஆம் தேதி அரசுப் பணியாளா் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பல்நோக்குப் பணியாளா்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிப். 13-இல் மருத்துவத் துறை இயக்குநா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.