மயான நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் போராட்டம்
பொன்னமராவதி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதியில் உள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில்,
மயானம் உள்ள நிலம் தனது பெயரில் பட்டாவில் இருப்பதாக கூறி க.ராமசாமி என்பவா் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.
Advertisement
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய வந்தபோது, ராமசாமி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உடலை அதே இடத்தில் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.