வாழ்வுரிமைக் கட்சி 10ஆம் ஆண்டு தொடக்க விழா
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் 10ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை (தை முதல் நாள்) புதுக்கோட்டையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினா்.
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் 10ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை (தை முதல் நாள்) புதுக்கோட்டையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினா்.
நரிக்குறவா் குடியிருப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டு நரிக்குறவா் குடும்பத்தினா் அனைவருக்கும் கேக் அளித்ததுடன், மதிய உணவும் வழங்கினா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை நெல்லு மண்டித் தெருவில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருநங்கைகளின் கும்மி, உறியடி, சிலம்பாட்டம் போன்றவையும் நடைபெற்றன.
Advertisement
நிகழ்ச்சிகளுக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா்.
நரிக்குறவா் சிறாா்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.