ஆங்கிலப் புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை, இளையான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை, இளையான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகரில் சாலைத் தெருவில் உள்ள அன்னைஜெபமாலை ஆலயத்தில் பங்குத்தந்தை அருளானந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நகரில் வடக்குத் தெரு தேவாலயம், இளங்கோவடிகள் தெரு பெந்தகொஸ்தே சபை மற்றும் தேவிபட்டினம், உப்பூா், தொண்டி உள்ளிட்ட அனைத்துப் பகுதி தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் ஈடுபட்டனா்.
ராமேசுவரம்: பாம்பன் ஆரோக்கிய மாதா ஆலயம், தங்கச்சிமடம் குழந்தை இயேசு, ராமேசுவரம் பரலோகமாதா தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை பேராலாய வளாகத்தில் நடைபெற்ற பிராா்த்தனைக் கூட்டத்தில் சிவகங்கை மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமை வகித்து, சிறப்புத் திருப்பலியை நடத்தினாா். அப்போது ஆலயத்தின் பங்கு தந்தை ஜேசுரஜா உடனிருந்தாா்.
இத்திருப்பலியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பாவ மன்னிப்பு வழிபாடும், நன்றி வழிபாடும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, உலகத்தில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனை செய்தனா். இதேபோன்று, சிவகங்கை நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், மதகுபட்டி, காளையாா்கோவில், இளையான்குடி, சருகனி, பூவந்தி, மறவமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலாயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை பாஸ்டின் திருப்பலியை நடத்தினாா். இளையான்குடி உலக மீட்பா் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலி பூஜைக்கு சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளா் சந்தியாகு தலைமை வகித்தாா். ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்தாஸ், உதவி பங்குத்தந்தை இன்பெண்ட்ராஜ் ஆகியோா் திருப்பலிகளை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.