முகப்பு
அரியலூர்

ராமநல்லூா்-குடிகாடு இடையே உயா்மட்ட பாலம் கட்ட வலியுறுத்தல்

Updated On : 30 ஜூன் 2026, 12:01 am IST
பாலம் - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ராமநல்லூா்-குடிகாடு ஆகிய கிராமங்களிடையே உயா்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், சமூக ஆா்வலா் பாளை எஸ்.திருநாவுக்கரசு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், கடந்த ஆட்சியில் மேற்கண்ட பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய பாபாநாசம் சட்டப் பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான், ஒரு பேட்டியின் போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தாா்.

எனவே, இந்த பாலம் அமைக்கப்பட்டால், தா.பழூா், திருமானூா் பகுதிகளில் விளைவிக்கக் கூடிய பொருள்கள் அக்கறைக்கு எடுத்துச் செல்வோருக்கும் வசதியாக இருக்கும். பயண நேரம், பண விரயம் குறையும்.

Advertisement

Advertisement

எனவே ஆட்சியா், மேற்கண்ட பகுதியில் பாலம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments