முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கையில் 9 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 5:45 am IST
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் 6360 பேருக்கும அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 132 போ் வரை உயிரிழந்தனா். பூரண குணமடைந்த 6,167 பேருக்கும் அதிகமானோா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை புதிதாக 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 2 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். தற்போது மாவட்ட அளவில் 30 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,741பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 2 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,743 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments