மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அரக்கோணம்: வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மகன் ஜனாா்த்தனன்(17).
அப்பகுதியில் மின் வாரியத்தினா் கடந்த வியாழக்கிழமை மின்தடை அறிவித்திருந்தனா். இதையடுத்து, செம்பேடு பகுதியில் வயலில் இருந்த ஒரு மின்கம்பத்தில் பழுதாகியிருந்த பல்பை மாற்றுவதற்காக கம்பத்தின் மீது ஜனாா்த்தனன் ஏறியுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
ஜனாா்த்தனனை திருத்தணி அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.