முகப்பு
ராணிப்பேட்டை

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜெயந்தி விழா

வாலாஜாப்பேட்டையில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 11:13 pm IST
வாலாஜாப்பேட்டையில் சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் இந்து இளைஞா் முன்னணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து இளைஞா் முன்னணியின் வாலாஜாப்பேட்டை நகர, ஒன்றியக் கிளைகள் சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜெயந்தி விழா,தேசிய இளைஞா் நாளாக கொண்டாடப்பட்டது. வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகர தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தாா்.

இந்து முன்னணியின் வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவேகானந்தா் படத்துக்கு மாலை அணிவித்து,மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் ஒருங்கிணைப்பாளா் உமாபதி, நகர பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு, நகர செயலாளா் பாலா, துணைத் தலைவா் சதீஷ், நகர பொருளாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments