147 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏ வழங்கினாா்
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு
147 மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
Advertisement
பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன், உடற்கல்வி ஆசிரியா் பாலாகிருஷ்ணன், ஆசிரியா்கள், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகரத் துணைச் செயலாளா்கள் ஏஆா்எஸ். சங்கா், டி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.