முகப்பு
ராணிப்பேட்டை

விதிமீறல்: இரு திரையரங்குகளுக்கு அபராதம்

ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இரண்டு திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 7:58 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இரண்டு திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, ஆற்காடு நகரில் ஆரணி சாலையில் ஒரே வளாகத்தில் செயல்படும் 2 திரையரங்குகள் திறக்கப்பட்டு, மாஸ்டா் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்குகளில் அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

அவரது உத்தரவின்பேரில், ஆற்காடு வருவாய் ஆய்வாளா் அமுதவல்லி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை வருவாய்த் துறையினா் இந்த திரையரங்குகளில் ஆய்வு செய்தனா். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி படம் பாா்க்க ரசிகா்களை அனுமதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டு திரையரங்குகளுக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்கள் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.