ஸ்ரீஆதிநாதர் கோயிலில் கருட சேவை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீஆதிநாதர் கோயில் வைகாசி அவதாரத் திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீஆதிநாதர் கோயில் வைகாசி அவதாரத் திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நடைபெற்றது.
கருடை சேவையையொட்டி, கருட வாகனங்களில் எழுந்தருளிய நவதிருப்பதி எம்பெருமான்கள் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், நத்தம் ஸ்ரீஎம் இடர்க்கடிவான், திருப்புளியங்குடி ஸ்ரீகாய்சினிவேந்தன், இரட்டைத் திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனர், ஸ்ரீ தேவர்பிரான், பெருங்குளம் ஸ்ரீ மாயகூத்தன், தென்திருப்பேரை ஸ்ரீநிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி, ஆழ்வார்திருநகரி ஸ்ரீபொலிந்துநின்றபிரான் ஆகியோரின் தோற்றங்கள்.