ஐபிஎல் போட்டிகள் 2 வாரங்கள் முன்னதாகவே தொடங்கப்படுமா? பிசிசிஐ செயலர் பதில்!
அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக பிசிசிஐ செயலர் தெரிவித்தது பற்றி...
பருவநிலை மாற்றங்கள் காரணமாக அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்கப்படுவதால் போட்டிகள் முடியும் கட்டத்தில், அதாவது மே மாத இறுதியில் வானிலை சற்று மோசமாக மாறுகிறது. இதனால் சில ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது:
Advertisement
Advertisement
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதிக்குள் முடிவடைந்தது. அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், மே 15 ஆம் தேதிக்குப் பிறகு, வானிலை தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகிறது.
ஒருபுறம் சில பகுதிகளில் மழை பெய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. மறுபுறம் சில பகுதிகளில் வெப்பம் அதிகமாக நிலவுகிறது. இவை விளையாடும் வீரர்களுக்கோ அல்லது பார்க்கும் ரசிகற்களுக்கோ சாதகமாக இல்லை.
எனவே, அடுத்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை மார்ச் மாத இறுதிக்கு முன்பாகவே தொடங்க முடியுமா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுக்களிடையே ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும், 2027 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள்களில் மோசமான வானிலை நிலவாமல் இருப்பதற்காக, மார்ச் 10 ஆம் தேதிக்குள் தொடரைத் தொடங்கி, மே 15 ஆம் தேதிக்குள் அதை நிறைவு செய்ய முடியுமா என்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.