திருமலையில் கருடபஞ்சமியையொட்டி கருடசேவை
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருடபஞ்சமியையொட்டி மாலை 6 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருடபஞ்சமியையொட்டி மாலை 6 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருட பஞ்சமி உத்ஸவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடத்தப்பட்டது. மாலை 6 மணி அளவில் மலையப்பஸ்வாமி கருட வாகனம் மேல் எழுந்தருளினார். மாட வீதிகளில் வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு மலையப்பஸ்வாமி அருளினார்.
தரிசனத்துக்கு 26 மணிநேரம் காத்திருப்பு: திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்துக்கு 26 மணிநேரமும் நடைபாதை மூலம் வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 9 மணிநேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை முழுவதும் 71,522 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 52,136 பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
Advertisement