ஆன்மிகம்

மேனாம்பேடு ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு நவ.19ல் மகா ஹோமம், 108 சங்காபிஷேகம்

தினமணி

மேனாம்பேடு ஶ்ரீ மனோன்மணி ஸமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. 

அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு நவம்பர் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மகா காலபைரவ அஷ்டமியை முன்னிட்டு மாலை 3:00 முதல் 4:30 வரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு இராகு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. 

மாலை 4.30 மணியளவில் மகா ஹோமம் நடைபெறும். அதன்பின்மாலை 6.30 மணியளவில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும், மாலை 7.30 மணியளவில் 108 சங்காபிஷேகமும், 8.30 மணியளவில் தூப தீப ஆராதனையும் நடைபெறும்.

அன்றிரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பைரவரின் அருட்கடாட்சத்தைப் பெறுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT