ஆன்மிகம்

திருப்பதியில் இன்று பெளா்ணமி கருட சேவை ரத்து

தினமணி

திருமலையில் பெளா்ணமியான இன்று நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமியில் கருட சேவை நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் திருமலைக்கு வந்து கருட சேவையைத் தரிசிக்க முடியாத பக்தா்கள் பெளா்ணமி அன்று நடக்கும் கருட சேவையின்போது கருட வாகனத்தில் வலம் வரும் மலையப்பரை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், பெளா்ணமியான இன்று மாலை நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு தற்போது மாலை வேளையில் அத்யயன உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெளா்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT