செய்திகள்

முருகனுக்கு தேன் காவடி அபிஷேகம்

தினமணி

குடியாத்தம் தரணம்பேட்டை, திருத்தணிகை முருகன், பரணி வேல், தேன் காவடி, புஷ்பக் காவடி கமிட்டி சார்பில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை தரணம்பேட்டை முத்து விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு தேன் காவடி அபிஷேகம் நடைபெற்றது.

மாலை தேன் காவடி விழாவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம், காவடி பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடியபடி சென்றனர்.
இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தரணம்பேட்டை காவடி, பஜனைக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT