முகப்பு
செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் ஓவியங்கள் மீது சிமென்ட் பூச்சு: பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பழமை வாய்ந்த ஓவியத்தின் மீது சுவிட்ச் போர்டு

Updated On : 27 ஜூன் 2018, 4:17 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பழமை வாய்ந்த ஓவியத்தின் மீது சுவிட்ச் போர்டு வைத்து சிமென்ட் பூச்சால் அழிக்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளும், சுவர் ஓவியங்களும் அமைந்துள்ளன. கோயிலில் உள்ள வையத்திருமாளிகை சுவரின் மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தசாவதாரங்கள், பள்ளி கொண்ட பெருமான், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை உட்பட திருமாலின் பெருமைகளை விளக்கும் ஓவியங்கள் ஆகும். 

இந்நிலையில், ஓவியத்தின் பழமையும், பெருமையும் தெரியாமல் அங்குள்ளோர் சுவிட்ச்போர்டு வைத்து சிமென்ட் பூச்சு பூசி இருப்பது பக்தர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.