செய்திகள்

விருகம்பாக்கம், நடேச நகர் கோயிலில் சாகம்பரி அலங்கார வழிபாடு

DIN

சென்னை மாநகரில் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடேச நகரில் அமைந்துள்ள சிவ-விஷ்ணு ஆலயம் இப்பகுதி மக்களால் சிறப்பாகப் போற்றப்பட்டு வருகிறது. இக்கோயிலில் விநாயகர், முருகன், தர்மசவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர், ராமர்-ஹயக்கிரீவர், தன்வந்தரி சந்நிதிகள் அமைந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில் வாயிலில் மூன்று நிலை கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாள் மிகவும் சிறப்பானது. இந்நாளில் உமா மகேசுவர விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் தர்மசவர்த்தினி - ராமலிங்கேசுவரருக்கும் காய்கறி - பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை "நிறைபணி - நிறைகனிவிழா" என அழைப்பார்கள். 

ஆடி மாதம் விதை விதைத்து விளைச்சலில் கிடைத்த காய்கறி - பழங்களை, இறைவன் - இறைவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பௌர்ணமி நாளில் படைத்து வழிபடுவார்கள். இவ்வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

24.09.2018 அன்று நடேச நகர் சிவவிஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற சாகம்பரி அலங்காரத்தைப் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தரிசித்து வழிபாடு செய்தனர். 

ஆலய தொடர்புக்கு - 9840094246 / 9445671834

தகவல் - கி. ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT