திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திரில் ஆண்டுதோறும் மார்கழி மாத நிறைவு நாளான போகிப் பண்டிகை அன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அந்த அரங்கில் திங்கள்கிழமை ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ச்சகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், கலாமந்திர அதிகாரிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு திருக்கல்யாணத்தைக் கண்டு களித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.