செய்திகள்

முத்துக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்

DIN


திருப்பத்தூரில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி, முத்துக்குமார சுவாமி கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன தொடங்கியது. இதையடுத்து, 20-ஆம் தேதி சிவகாமி அம்பாள் சமேத சிதம்பேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி, பஜார் பகுதி முழுவதும் வியாபாரிகளும், சமூக சேவகர்களும் மோர், பானகம் ஆகியவற்றை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT