செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

DIN

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்று மறையாக கொண்டு ஊஞ்சல் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். கோயிலின் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை வேளையில் இவ்விழா நடைபெறும். 

முக்கிய நிகழ்வான அக்.,24-ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். 
அக்.24-ம் தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது. மேலும், அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. 

இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT