திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
Advertisement
பக்தர்கள் ஐயாறப்பா போற்றி, அறம் வளர்த்த நாயகியே போற்றி என கோஷங்களுக்கு இடையே வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரும் இரண்டாம் தேதி சப்தஸ்தான விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.