முகப்பு
சேலம்

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 5 மார்ச் 2016, 4:31 am IST
பகிர்:

நங்கவள்ளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரம் தயாரிப்பு மற்றும் பண்ணைக் கழிவு மறுசுழற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோனூர் ஊராட்சியில் உள்ள கந்தனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு நங்கவள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் ந.செந்தில்குமார் தலைமை வகித்தார். கோனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவு மேலாண்மை உத்திகள், மறுசுழற்சி பயன்பாடு மூலம் கூடுதல் வருமானம் பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு முறைகள் பற்றியும், பண்ணைக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிர்தா, உதவி மேலாளர்கள் இளையராஜா, ராஜேஷ்குமார் மற்றும் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.