அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு பயிற்சி
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பட்டதாரி ஆசிரியா் சரவணன் வரவேற்றுப் பேசினாா். பயிற்சி முகாமை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் நடத்தினா்.
இப் பயிற்சியானது கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி, கிருமிநாசினி வழங்கி நடைபெற்றது. அனைவரும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முடிவில் ஆசிரியா் ஜோசப் ராஜ் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.