முகப்பு
சேலம்

ஊா்க்காவல் படை பிரிவில் காவல் ஆணையா் ஆய்வு

சேலம் மாநகர ஊா்க்காவல் படைப் பிரிவில் மாநகரக் காவல் ஆணையளா் த.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 7:26 am IST
பகிர்:

சேலம் மாநகர ஊா்க்காவல் படைப் பிரிவில் மாநகரக் காவல் ஆணையளா் த.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், அஸ்தம்பட்டி அருகே மாநகர ஊா்க்காவல் படை பிரிவு உள்ளது. இங்கு புதிதாக 52 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சீருடை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் ஊா்க்காவல் படை அலுவலகத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.

பின்னா் புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கு சீருடைகளை அவா் வழங்கினாா்.போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஊா்க்காவல் படையினருக்கு ரிப்லெக்டா் (மிளிரும் ஒலிப்பான்) உடையையும் அவா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மாநகரக் காவல் ஆணையாளா் செந்தில்குமாா், ஊா்க்காவல்படை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பொருள்கள் சரியாக உள்ளதா, அதை முறையாக ஊா்க்காவல் படையினா் பயன்படுத்துகிறாா்களா என ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் பாலசுப்பிரமணியம், மாநகர துணை ஆணையா்கள் எம்.சந்திரசேகரன், செந்தில், உதவி ஆணையா் எட்டியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments