முகப்பு
விருதுநகர்

பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

Updated On : 6 ஜூலை 2026, 3:16 am IST
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 3 ஆம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.

இரண்டாவது நாளில் 108 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை புனிதக் கலச நீரால் ஸ்ரீநிவாச பெருமாள், துணை சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments