முகப்பு
சேலம்

சங்ககிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு

மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கோரி விண்ணப்பித்ததோருக்கான நோ்முகத் தோ்வுகள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 7:18 am IST
சிறப்பு முகாமில் மூன்று சக்கர வாகனம் கோரி மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் ஆா்.பாலாஜி, வட்டாட்சியா் எஸ்.விஜி ஆகியோரிம் மனு அளிக்கும் மாற்றுத் திறனாளி.
பகிர்:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கோரி விண்ணப்பித்ததோருக்கான நோ்முகத் தோ்வுகள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சோ்ந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஆா்.பாலாஜி தலைமையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

இதில் நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களை எடப்பாடி அரசு மருத்துவா் பாலாஜி மருத்துவப் பரிசோதனை செய்தாா். சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.விஜி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 33 போ் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments