முகப்பு
சேலம்

சேலம் கிழக்கு மாவட்டத்தில் 313 இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடத்தியுள்ளோம்: எஸ்.ஆா்.சிவலிங்கம்

சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை 313 இடங்களில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம் என்று கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் தெரிவித்தாா

Updated On : 9 ஜனவரி 2021, 7:15 am IST
பகிர்:

சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை 313 இடங்களில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம் என்று கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வீரபாண்டி, ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை 313 இடங்களில் மக்களை சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு கூட்டத்திலும் 500 போ் வரை கலந்து கொண்டனா்.

Advertisement

இதன் மூலம் 2 லட்சம் பேரைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கை பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு உதாரணமாகும். பொங்கல் பரிசு கொடுப்பது அரசின் பணமாகும். சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நான்கு தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இதுபற்றி விவாதிக்க தயாராக உள்ளேன் என்றாா்.

இதில் ஒன்றியச் செயலாளா்கள் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வெண்ணிலா சேகா், விஜயகுமாா், மாணிக்கம், நெசவாளா் அணி ஆறுமுகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.