மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
ஆத்தூா் போக்குவரத்து பணிமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் போக்குவரத்து பணிமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் தாலுகா, பூமரத்துப்பட்டி, முட்டல் கிராமங்களுக்கு பேருந்து வசதி கோரியும், ஆத்தூா் தாலுகாவில் உள்ள கிராமத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்து எண் 12 வாகன வரி கட்டாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாகன வரி கட்ட பிச்சை எடுக்கும் போராட்டம் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி கண்டனம் தெரிவித்து பேசினாா். தாலுகா குழு உறுப்பினா்கள் எல்.கலைமணி, எம்.சடையன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.