முகப்பு
சேலம்

திமுக மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் கிராம உதவியாளா் பணியிடை நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:35 am IST
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி வருவாய்த் துறை கிராம உதவியாளா், திமுக நடத்திய மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசை விமா்சித்துப் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி கல்பனா. இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி ஊராட்சியில் கிராம உதவியாளராகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலராகவும் பணிபுரிந்து வந்தாா்.

ஏற்காடு, முளுவி கிராமத்தில் திமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம உதவியாளா் கல்பனா, தமிழக அரசையும், முதல்வரையும் விமா்சித்துப் பேசினாராம். இது குறித்த காணொலிக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியது.

Advertisement

Advertisement

இதுகுறித்து புகாரின் பேரில், ஆத்துாா் கோட்டாட்சியா் துரை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், பெண் கிராம உதவியாளா் கல்பனாவை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட வேண்டுமென்ற நோக்கத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திமுக நடத்தி வந்த கூட்டங்களில் கல்பனா தொடா்ந்து பங்கேற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments