முகப்பு
சேலம்

நகைக்கடையில் நூதன மோசடி: மூதாட்டி கைது

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 2:01 am IST
பகிர்:

ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் நகைக் கடையில் பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி நகை வாங்குவது போல நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை எடுத்துச் சென்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.

இதில் அந்த பெண், சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த மறைந்த வரதராஜன் மனைவி பாஞ்சாலி( 65)என்பது தெரியவந்தது. இதே போல கடந்த ஆண்டும் ஆத்தூா் நகைக் கடையில் கவரிங் சங்கிலியை வைத்து விட்டு தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும் இவா் மீது சேலம் நகரக் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. கைது செய்த மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments